Current Affairs 12.03.2016
ஆதார் மசோதா (Aadhar Bill) :
ஆதார் மசோதா (Aadhar Bill) :
- ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் வகையில் மசோதா மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
- ஆதார் மசோதா பணமசோதாவாக தாக்கல் செய்யப்பட்டது. பண மசோதாவாக தாக்கல் செய்யப்படும் மசோதாக்கல் மக்களவையில் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் மாநிலங்கள் அவையில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால் 14 நாட்களுக்குள்ளாக இந்த ஒப்புதல் பெறப்பட வில்லை என்றால், மக்கள் அவையின் ஒப்புதலே போதுமானதாகக் கருதி சட்டமாக மாற்றப்படும்.
திருநெல்வேலிக் கலகம் :
- 1908 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி வ.உ. சிதம்பரனார், சுப்பிரமண்ய சிவா மற்றும் பத்மநாபன் (அய்யங்கார்) ஆகியோர் ஆங்கிலேய அரசினால் கைது செய்யப்பட்டனர். அதன் விளைவாக 13.03.1908 ல் திருநெல்வேலியில் கலவரம் உண்டானது. இது திருநெல்வேலி கலகம் என்றழைக்கப்படுகிறது.
Click to view in large size
தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் :
- தமிழகத்தில் தமிழக தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1949 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. மரங்கள் அழிப்பை தடுக்கும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது.
EmoticonEmoticon